ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஆசையாக ஒரு பணிஸை திருடிய குற்றத்திற்காக, தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பணிஸை திருடியதாக, பல குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.
ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு குறித்த நபர், பணிஸ் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள், தன்னை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் மிகுந்த எரிச்சலுற்று, அந்த கடையின் ஊழியர்களிடம் கேட்காமலேயே அங்கிருந்த பணிஸை எடுத்துக் கொண்டு சென்றதாக, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த செயலுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.