இந்தியாவின் திருப்பூரில் உள்ள பாடசாலையில் கல்வி பயின்று வரும் தர்ஷினி என்ற மாணவி, ஏ.டீ.எம் இயந்திரத்தில் நாணயத் தாள்களை பெறுவது போன்று, சில்லறைக் காசுகளையும் பெறும் ஏ.டீ.எம் இயந்திரம் ஒன்றை அண்மையில் கண்டுபிடித்திருந்தார்.
கடந்த டிசம்பர் மாதம் கூகுள் நிறுவனம், அறிவியல் சார்ந்த போட்டி ஒன்றை நடத்தியது. இந்த போட்டிக்கு எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் தர்ஷினி, தனது கண்டுபிடிப்பை வீடியோ மூலம் பதிவு செய்து அனுப்பியிருந்தார்.
இந்த முயற்சிக்கு கூகுள் நிறுவனம், தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் தர்ஷினிக்கு சான்றிதழையும் வழங்கி கூகுள் நிறுவனம் கௌரவித்துள்ளது.