மங்கையர்களுக்கு தனது சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும். இதற்காக பல இயற்கி சாதன பொருட்களை பெண்கள் பயன்படுத்துவார்கள். சில பெண்கள் இயற்கையான முறையில் தனது அழகை மெருகூட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.
எனினும் தற்போது மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால், பெண்களின் சருமம் பொலிவிழப்பத்துடன், கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. இவ்வாறான சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் பல கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.
இவ்வாறு கரும்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்கள், எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் இயற்கையாகவே அழகாக்கி கொள்ளமுடியும்.
பழமையான காலத்திலிருந்து பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கடலைமாவு, மஞ்சள்தூள் என்பவை, உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி கடலைமாவை எடுத்துக் கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அந்த கலவையை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.
கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் அற்புத பொருளாகும். இரண்டு தேக்கரண்டி கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து முகத்தில் நன்றாக தடவி, நன்கு உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். அதேபோல் குளிக்கும் போது, கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.
கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் “பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். பருக்கள் படிப்படியாக மறைந்து போகும்.
சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால், அதற்கு கடலை மாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் சேவித்து வர முகம் பொலிவாகும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். சில நிமிடங்கள் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்திலுள்ள எண்ணெய் பசை நீங்கி, முகம் பொழிவுபெறும்.