பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ,பிரிந்திருந்த தாடி பாலாஜி மற்றும் நித்தியா, ஒன்றாக வாழ சம்மதித்து ,வாழ்ந்தும் வந்துள்ள நிலையில், இப்போது கருத்துவேறுபாடு, காரணமாக மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறியுள்ளது.
அதுவும், நித்தியா, தாடி பாலாஜி மீது ,போலீஸ் புகாரும் கொடுத்துள்ளார் என்ற விடயம் நாம் அறிந்ததுதான்.
இந்த நிலையில் தனது பக்கம் உள்ள நியாயம், மற்றும் நித்தியாவுக்கும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் ,செய்தியாளர்கள் மத்தியில் பாலாஜி வெட்ட வெளிச்சமாக கூறியுள்ளார். இதன் பிறகு தான் உண்மை தெரிகிறது.
குழந்தையின் எதிர்காலம் நித்தியாவால் பாதிக்கப்படுகிறது.அதற்கு காரணம் உதவி ஆய்வாளர் மனோஜ்.ஏனெனில் ,அவர் இரட்டை வேடம் போடுகிறார். அதுமட்டுமல்லாமல்,போலீசாரும்,முறையாக விசாரணை செய்யவில்லை.அதனால்,மிகவும் மன உளைச்சலில் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், நித்தியா செய்தது எல்லாமே நடிப்பு .அங்கிருந்து வெளியேறிய பின்னர், நித்தியா என்னுடன் வாழவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
தன்னுடைய குழந்தைக்கு தேவையானவற்றை செய்யத் தயார். ஆனால் உதவி ஆய்வாளர் மனோஜ் என்பவரால், பிள்ளைக்கு ஆபத்து இருப்பதாகவும், நித்யா ,அவருடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார் என்றும் ,தாடி பாலாஜி கூறியுள்ளார்.
தாடி பாலாஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு, நித்யா அம்மணி, எப்படியான விளக்கத்தைக் கொடுக்கப் போகிறார் என்று பார்ப்போம்!