சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான Huawei, தொடர்ந்து அமெரிக்காவின் குற்றச்சாட்டை எதிர்நோக்கி கொண்டே இருக்கிறது.
Huawei, தனது பொருட்களை ஈரானுக்கு விற்பனை செய்யக் கூடாது என்று, அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஆனால் அமெரிக்கா விதித்த தடையையும் மீறி Huawei தனது வர்த்தக நடவடிக்கைகளை ஈரானுடன் முன்னெடுத்து வருவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இதற்கிடையில் Huawei நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்வான்ஜவ், கனடா நாட்டின் வான்கூவர் நகரில் கடந்த டிசம்பர் 1 ம் திகதி கைது செய்யப்பட்டார். அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது.
Huawei நிறுவனம் தனது தொலை தொடர்பு சாதனங்கள் மூலம், சீனாவுக்காக உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம், அந்நிறுவனத்தின் பொருட்களை அமெரிக்காவில் பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பித்தது.
தமது நிறுவன பொருட்களின் விற்பனைக்கு தடை விதித்தமை காரணாமாக அமெரிக்க அரசாங்கம் மீது Huawei நிறுவனம் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக Huawei நிறுவனம் தெரிவித்துள்ளது.