உலகளாவிய ரீதியில் எல்லா நாடுகளும் எதிர்நோக்குகின்ற பிரச்சினை வெப்பநிலை அதிகரிப்புதான். வறட்சி, பாசிபட்டினி, நீர் பற்றாக்குறை, தோல் நோய்கள், என மக்கள் அவஸ்தைப்படுகின்றார்கள். நிலத்தில் மாத்திரமே வெப்பம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது என்றால் கடல் நீரின் வெப்ப அளவும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.
நிலத்தில் அனல்காற்று வீசுவதைப் போலக் கடலிலும் வெப்ப அலை வீசுவதுண்டு.
அது இப்போது, கடந்த நூற்றாண்டைக் காட்டிலும் அடிக்கடி உருவாகி, கடல்வாழ் உயிரினங்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது.
இந்தத் தகவல் Nature Climate Change என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
வெப்ப அலைகள், பவளப்பாறைகளையும் கடல்பாசி இனங்களையும் சேதப்படுத்தி அழித்துவிடுகின்றன.
ஐந்து நாட்களுக்குத் தொடர்ச்சியாகக் கடல்நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட சூடாக இருந்தால், வெப்ப அலைகள் உருவாவதாக நம்பப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளாக, பூமியிலிருந்து வெளியான வெப்ப வாயுக்களால் உருவான வெப்பத்தில் 90 சதவீத வெப்பத்தை
பெருங்கடல்கள் உறிஞ்சியுள்ளதாக ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
கடலின் வெப்பம் மிதமிஞ்சி அதிகரித்தால், வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்படும்; வெப்ப அலை நீடிக்கும் காலமும் அதிகரிக்கும்.
அதனால், காலப்போக்கில் கடல்வாழ் உயிரினங்கள் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கும்.
கடல்வாழ் உயிரினங்கள் அழிவடையும் பட்சத்தில் கடலரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதனால் பல்வேறு இயற்கை அனர்த்தங்களை சந்திக்கவேண்டியிருக்குமென Nature Climate Change என்ற சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.