Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
கையை வெட்டிக்கொண்டு காப்பீடு கோரிய யுவதி

SooriyanFM Gossip - கையை வெட்டிக்கொண்டு காப்பீடு கோரிய யுவதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

556 Views
ஸ்லோவேனியா நாட்டில் ஒரு பெண் தனது குடும்பத்துக்கு உதவும் பொருட்டு காப்பிட்டு பணத்துக்காக தனது கையை வெட்டிக்கொண்டதாக ஸ்லோவேனியா நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

முறைகேடாக காப்பிட்டு பணத்தை கோருவதற்காக உறவினர்கள் உதவியுடன் வட்டரம்பம் மூலமாக அந்தப்பெண் கையை வெட்டிக்கொண்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.



21 வயது பெண் மற்றும் அவரது உறவினர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்படுமானால் எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

இந்த சந்தேக நபர்கள் சமீபத்தில் காயத்திற்கான காப்பீடு எடுத்திருக்கின்றனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சுமார் 4 லட்சம் யூரோக்கள் இழப்பீடு பெறுவதற்காகவும் காப்பீடு திட்டம் வாயிலாக மாதம் 3000 யூரோக்கள் பெறுவதற்காகவும் அப்பெண் இந்த காரியத்தைச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அக்குடும்பத்தில் இருந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். 
அக்குடும்ப உறுப்பினர்கள் வேண்டுமென்றே வீட்டுக்குள் வைத்து அப்பெண்ணின் கையை வெட்டியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அப்பெண்ணின் கை வெட்டப்பட்ட பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள், வட்டரம்ப கிளையில் அவரது கை மாட்டிக்கொண்டு இவ்வாறு துண்டிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது வேண்டுமென்றே வெட்டப்பட்டு துண்டாகிப் போன கையை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். 

நிரந்தரமாக அவரது கை முடமாக வேண்டும் என்பதை உறுதிப்படுத்த அக்குடும்பத்தின் அவ்வாறு மிக கொடூரமாக நடந்து கொண்டிருக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால் அதிகாரிகள் உரிய நேரத்தில் அந்த கை பாகத்தை எடுத்துச் சென்று சிகிசசையளிக்க உதவியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top