சீனாவின் ஹூபி மாகாணத்திலுள்ள, டான்ஷூய் எனும் ஆற்றங்கரையில், எப்போதும் இல்லாத வகையில்,51.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, ஆயிரக்கணக்கான உயிரினங்களுடைய, புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் மிகவும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை, மிகவும் நேர்த்தியாக,சரியான அளவாக, துல்லியமாக ,புதைபடிவமாகி, பதிந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த உயிரிகளில், அரைவாசிக்கும் அதிகமானவை,இதற்கு முன்னர் கண்டறியப்படாதவை என்பதால், பிரமிக்கத்தக்க கண்டுபிடிப்பு என்றும், குயிங்ஜியாங் பயோடா என அறியப்படும் எனவும், புதை படிவவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆற்றங்கரையில், 20,000க்கும் மேற்பட்ட படிவங்கள் சேகரிக்கப்பட்டு,அவற்றில் புழுக்கள், ஜெல்லி மீன், கடல் அனிமோன், பாசி உள்ளிட்ட உயிரிகளின், 4,351 புதைபடிவங்கள், இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளன எனவும், வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.