தமிழ்த்திரையுலகப் பின்னணி கொண்டவரும், பிரபல இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்தி சிங் இருவரும் நாயகிகளாக நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேர, அரசியலை மையப்படுத்திய கதையை கொண்டதாக படமாக்கப்பட்டுள்ளது "NGK".
"NGK" என்ற பெயர் சுருக்கம் கொண்டதான (Nandha Gopalan Kumaran) என்ற இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நந்த கோபாலன் குமரன் என்ற பெயர் கொண்ட சாமானிய இளைஞன் ஒருவன் எந்தவித அரசியல் பின்புலமுமற்ற நிலையிலிருந்து அரசியலுக்குள் நுழைந்து, அரசியல் களத்தில் அதிரடியான பல மாற்றங்களை ஏற்படுத்துவது போல் கதை பின்னப்பட்டிருப்பதாக படக்குழுவிற்கு நெருக்கமான பக்கத்திலிருந்து செய்திகள் வெளியாகின்றன.
இந்தநிலையில், அண்மையில் "NGK" திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகியிருந்தது. அந்தக் காட்சியில் அரசியல் சாயல் இருந்தமையினால், இந்தப் படம் உண்மையில் அரசியல் பின்னணி கொண்ட கதையாக இருக்கலாம் என்பதாகவே நம்பத் தோன்றுகின்றது. இதன் காரணமாக, சூர்யா ரசிகளிடம் மட்டுமன்றி பல்வேறுபட்ட தரப்பினரிடையேயும் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'ட்ரீம் வொரியர்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசை வழங்க படம் திரை காணும் முழுமை பெற்றுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி படம் வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் வெள்ளித்திரையில் ரசிகர்களின் உள்ளம் கொள்ளப்போகின்றது சூர்யாவின் "NGK" திரைப்படம்.