இணையத்தளங்களில் உள்ள அனைத்து தீங்கான விடயங்களையும் அகற்ற முடியாது என, Facebook நிறுவனரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சமூக வலைத்தளங்கள் குறித்து, உரிய சட்ட திட்டங்களை புதுப்பிப்பதின் மூலம், அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். அத்துடன் தமது கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்லும் உரிமை, பொது மக்களுக்கு நிச்சயமாக இருக்க வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தல் நேர்மை, தனியுரிமை, தகவல்களை எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட முதன்மையான விடயங்களில், புதிதாக பல ஆரோக்கியமான ஒழுங்குமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் இணையத்தங்களில் உள்ள தீங்கான உள்ளடக்கம் அனைத்தையும் அகற்றுவது என்பது நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்றாகும் என, மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.