ஏப்ரல் 2 ம் திகதியான இன்று உலக குழந்தைகள் புத்தக நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது 1967-ம் ஆண்டு முதல் இந்த குழந்தைகள் புத்தக தினம் கொண்டாட பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்
இந்நாளாது ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும். இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம் (International Board on Books for Young People-IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு ஒன்று தான் இந்த தினத்தை ஆரம்பித்து கொண்டாடி வருகின்றது .
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது இந்த இரண்டு நோக்கங்களை உணர்த்துகின்றது . 1. புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல். 2. குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல் என்பதையே ஆகும்