இந்நிலையில், அடுத்த கட்டமாக 5-ஜியை அறிமுகம் செய்வவதில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கிடையே போட்டித்தன்மை நிலவி வந்தது. இதன் காரணமாக, 5ஜியை இன்று அறிமுகம் செய்ய, ஏற்கனவே தென்கொரியா தீர்மானித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம், அதிவேக செல்போன் நெட்வொர்க் சேவையை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை தென்கொரியா பெற்றுள்ளது. அங்குள்ள எஸ்கே டெலிகாம் நிறுவனம், நாட்டின் 6 பிரபலங்களுக்கு முதலில் இந்த சேவையை வழங்கி ஆரம்பித்துள்ளது. இவர்களில் ஒலிம்பிக்கில் ஐஸ் ஸ்கேட்டிங்கில் பதக்கம் பெற்ற வீராங்கனை கிம் யுனா, 5ஜி சேவையை பெற்ற முதல் வாடிக்கையாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த அதிதிறன் கொண்ட சேவையை பெற்றுக்கொள்ள, Galaxy S10 5G என்ற ஸ்மார்ட் போனை Samsung நிறுவனம் வடிவமைத்துள்ளது. அமெரிக்காவில் இந்த சேவையை பெற வேண்டுமானால் மோடோ இசட் 3 என்ற ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும். 4ஜியை விட 5ஜி 20 மடங்கு வேகமானது என்பதுடன், ஒரு முழு சினிமாவையும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் 5ஜியில் download செய்ய முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
இது இவ்வாறு இருக்க, நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் 5ஜி சேவையை அமெரிக்கா, தான் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது. எனினும், அமெரிக்காவை விட 2 மணித்தியாலங்கள் முன்னதாக 5ஜி சேவையை தென்கொரியா தொடங்கியதால், உலகின் முதல் 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்ட நாடு என்ற பெருமை, தென்கொரியாவுக்கு கிடைத்துள்ளது.