ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அமைச்சு பதவிகளை பெற்றுள்ள 4 பேர் இன்று தமது அமைச்சு பதவிகளில் இருந்து விலக உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, டிலான் பெரேரா, மகிந்த யாப்பா அபேவர்தன, சி பி ரட்நாயக்க மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் இவ்வாறு தமது அமைச்சு பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இவர்கள் நான்கு பேரும் இன்றைய தினம் ஊடக வியலாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.