நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர ஹீரோக்களில் ஒருவர் அவர். நடிகை ஷாலினியை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அமர்க்களம் பட படப்பிடிப்பின் போது பிரபல நடிகரும் இயக்குநருமான நடிகர் ரமேஷ் கண்ணா அஜித்திற்கு ஒரு அறிவுரை செய்தாராம். "நடிகையை திருமணம் செய்யாதே. எல்லாரும் விவகாரத்தாகி ஆகி போயிடுறாங்க.
ஒரு நல்ல குடும்ப பெண்ணாக பார்த்து திருமணம் செய்துகொள்" என ரமேஷ் கண்ணா கூறியுள்ளார். அதன்பிறகு தான் அவரிடம் இயக்குனர் சரண் 'அஜித்-ஷாலினி' காதலிப்பதை கூறியிருக்கிறார். அதை அறிந்து ரமேஷ் கண்ணாவிற்கு சங்கடமாக போய்விட்டதாம். அதன்பிறகு அஜித்-ஷாலினி திருமணத்திற்கு சென்று வாழ்த்தியுள்ளார் ரமேஷ் கண்ணா