தமிழ்நாட்டின் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி கற்று வந்த பிரகதி என்ற மாணவியின் கை விரல்கள் வெட்டப்பட்ட நிலையில், அவரது உடலம் கண்டுபிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல நாட்களாக பிரகதியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதன்பின்னர் காவல்துறையின் உயர் அதிகாரிகள், பிரகதியை கண்டுபிடிப்பதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது பிரகதி பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் வைத்து, ஆடைகள் களைந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் பிரகதியின் கை விரல்கள் அனைத்தும் வெட்டப்பட்டிருந்தன.
இதனை அடுத்து சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். பிரகதிக்கு உறவினர் ஒருவருடன் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகவும், திருமண புடவை எடுப்பதற்காக பிரகதி கடைக்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கொலையாளியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, அப்பகுதி காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.