வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் இனியா . அதைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான போட்டு திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் பாராட்ட பட்டது .
தமிழ் திரைப்படங்களில் மட்டும் அல்லாமல் மலையாளம் கன்னடம் எங்கணும் மூன்று மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் . இந்த நிலையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார் . தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் திரைப்பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற திரைப்படத்தில் அவர் நடிப்பதாகவும் . அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடத்தை ஏற்றபதாகவும் அவர் கூறியுள்ளார் .
அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படம் எனறும் . இந்த திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் வலுவாக கால் பாதிக்க முடியும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார் . இன்னொரு சந்தோஷமான விடயமாக அவர் குறிப்பிட்டதாவது .. கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட "துரோணா" என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியா நடித்துள்ளதாகவும் கல்வியை மையப்படுத்தி உருவாகியுள்ளதாகவும் இந்த திரைப்படம் தனக்கு நல்ல பேரை கொடுக்கும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.