இந்தோனேசியாவின் புதிய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஆறு மாதகால பிரச்சாரத்திற்குப் பின்னர், இன்று தேர்தல் இடம்பெறுகிறது.
ஒரே நாளில் அதிகம் பேர் வாக்களிக்கும் உலகிலேயே மிகப்பெரிய தேர்தலான இந்தோனேசிய அதிபர் தேர்தல் மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவும், பிராபோவோ சுபியண்டோவும் பிரதான வேட்பாளர்களாக இந்தத் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அங்குள்ள மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சுமார் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச் சாவடி மையங்கள், 60 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் என மிக பிரமாண்டமாக இந்தத் தேர்தலானது நடைபெறுகிறது.
இருபது கட்சிகள் போட்டியிடும் நிலையில் மொத்தமாக 2 லட்சத்து 45 ஆயிரம் வேட்பாளர்கள் இதில் களமிறங்கியுள்ளனர். ஒவ்வொரு கட்சியிலும் 30 சதவிகித பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்