நாம் வாழும் சமூகத்தில் நடக்கபோகும் விடயங்களை எண்ணி அழுபவர்கள் அதிகம் இருக்கின்றனர், ஒரு வேளை அது நடக்காவிடில் அழுதது கூட வீணாகி விடும். சாகும் நாளை எண்ணிக்கொண்டிருந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்று பலர் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் இவற்றில் இது ஒரு வகை.
பிரித்தானியாவில் 5 வயதான ஒரு சிறுமி தன்னுடைய குட்டி தம்பி வளரக்கூடாது, வளர்ந்தால் தனை விட்டுப் பிரிந்துவிடுவான்; தன்னை விட்டு அவன் பிரிந்து விடக்கூடாது என்று அழுகிறாள். அவன் ரொம்ப அழகாக இருக்கிறான் அவன் என்னை விட்டு பிரிந்து விடக்கூடாது என மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறாள் இந்த சிறுமி.
சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் பிரபல உளவியளார் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, 3-5 வயதான குழந்தைகளுக்கு இவ்வாறான எண்ணம் வருவது இயற்கையானது தான். பயப்பட தேவையில்லை, அவ்வாறான எண்ணங்களோடு வாழும் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிகமான கவனம் எடுக்க வேண்டும், அதிக அன்பு காட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் சில குழந்தைகளுக்கு IQ அதிகமாக இருப்பதால் மரணத்தை பற்றி அவர்கள்; அதிகம் தெரிந்திருப்பது தான் இதற்குக் காரணம், இதனாலேயே அவர்கள் தன் தம்பியோ, தங்கையோ வளர கூடாது எனவும், அவர்களை விட்டு பிரிந்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த சிறுமி தன் தம்பியின் பக்கம் திரும்பி அவனை பார்த்த வண்ணம் அழும் வீடியோ பதிவுகளும், புகைப்படங்களும் இணையத்தில் பலரால் தேடப் படுகின்றன.
இதோ காணொளி..