திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் தான் பானு பிரகாஷ்.அவருடைய மகனான , ராஜ் ஐயப்பா, அதர்வா கதாநாயகனாக நடித்த, 100 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பானு பிரகாஷுக்கு, தன் மகனை நடிகராக்க வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் இருந்ததில்லையாம்.
ஒருமுறை ,தல அஜித்துடன் பேசும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது ,அஜித்,அவருடைய குடும்பத்தவர் பற்றி பேசிவிட்டு, மகனின் புகைப்படம் அனுப்புமாறு கூறினாராம்.படத்தைப் பார்த்த தல ,பையனுக்கு நடிகர் ஆகும் அனைத்து அம்சங்களும் உள்ளது. நல்லபடியாக நடந்து கொண்டால், திரையுலகில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என வாழ்த்தினாராம்.
அஜித் இவ்வாறு சொன்ன பிறகு, தன் மகனை நடிகராக்கும் முயற்சியில் பானு பிரகாஷ், முழு மூச்சாக இறங்கியிருக்கிறார். அந்த நேரம் ,100 பட வாய்ப்பு வரவும், மகனை நடிகராக்கிவிட்டாராம்.