ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம்பிடித்த முன்னணி காதல் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமான இவர், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட முக்கிய படங்களில் நாயகியாக நடித்தார்.
பின்னர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட சோனியா அகர்வால், திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பை அடுத்து, விவாகரித்து பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சோனியா அகர்வாலுக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. எனினும் கடந்த தினம் வெளியான அயோக்யா படத்தில் ஒரு காட்சியில் மட்டும் வந்து சென்றார்.
இந்த நிலையில், தனக்கு அம்மா பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு அதிக ஆர்வம் உள்ளதாக நடிகை சோனியா அகர்வால் குறிப்பிட்டுள்ளார். ''இப்போது 36 வயது ஆகின்றது. ஒரு பையனுக்கோ, சிறுமிக்கோ அம்மாவாக நடிக்க நான் தயார். ஆனால் சில இயக்குனர்கள் என்னை என் வயதையொத்த ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க கேட்கிறார்கள். இது என்னை எரிச்சலாக்குகிறது.
‘தடம்’ படத்தில் அருண் விஜய்யின் சிறுவயது அம்மாவாக நடித்தேன். அதற்கே முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. கதையை முழுமையாக கேட்ட பிறகு என் வேடத்துக்கான முக்கியத்துவம் கருதி ஒப்புக் கொண்டேன். அயோக்யா விஷாலின் படம். என்னுடைய படம் அல்ல. எனவே ஒரு காட்சியில் வந்து சென்றேன்'' என நடிகை சோனியா அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.