இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் ஜாபுளா மாவட்டத்தில் உள்ள தண்டலா என்ற பகுதியில் உள்ள ஜவஹர் நவோதயா என்ற கல்லூரியில் கற்று வந்த மாணவி ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட வீட்டுப் பாடத்தை பூர்த்தி செய்யாமல் வந்தமையினால், ஆசிரியரின் கடும் கோபத்துக்கு ஆளாக்கப்பட்டார்.
இதனை அடுத்து குறித்த மாணவியை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு, 14 மாணவர்களைக் கொண்டு, இருமுறை கன்னத்தில் அறையுமாறு ஆசிரியர் உத்தரவிட்டார்.
ஆசிரியர் கூறியபடி, அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் 14 பேர், சுமார் 168 முறை குறித்த மாணவியின் கன்னம் பழுக்க அறைந்துள்ளனர். இது குறித்து அறிந்த மாணவியின் தந்தை காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து குறித்த ஆசிரியர் பதவி நீக்கப்பட்டார்.
அத்துடன் குறித்த ஆசிரியரை கைது செய்த அப்பகுதி காவல்துறையினர், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்துள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.