மருத்துவர்கள் இழைத்த தவறால், அபபாவி மக்கள் பாதிப்பு
SooriyanFM Gossip - மருத்துவர்கள் இழைத்த தவறால், அபபாவி மக்கள் பாதிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பாகிஸ்தானிலுள்ள சிந்தி மாகாணத்தின் வஸாயே என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலர், HIV நோய்த் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
HIV நோய் தொற்றாளர்களுக்கு செலுத்தும் ஊசியை, குறித்த கிராமத்தில் வசிக்கும் அப்பாவி மக்களுக்கு செலுத்தியதன் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவர்கள் பணத்தைச் சம்பாதிப்பதற்காகவே இத்தகைய மோசமான செயலைப் புரிந்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செயல்பாடு காரணமாக பல குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
உலக அளவில் HIV வேகமாகப் பரவிவரும் நாடுகளில் பாகிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.