நடிகர் கமல்ஹாசன் மீண்டும் 'பிக்பொஸ்' அவதாரம் எடுக்கும் விளம்பரக் காணொளி வெளிவந்தது முதல், இந்த முறை போட்டியாளர்களாக யார் தெரிவாக்கப்போகின்றார்கள் என்று பிக்பொஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் முதலாவதாக பிக்பொஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைப்பதற்குத் தெரிவாகியுள்ளார் சின்னத்திரை நட்சத்திரம் மதுமிதா.
பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சுற்றாக ஆரம்பிக்கும் இந்தப் போட்டியில் முதலாவதாகத் தெரிவாகியுள்ள இந்தப் பெண் நட்சத்திரமான "ஜாங்கிரி" மதுமிதா, 'சின்னப் பாப்பா பெரிய பாப்பா' என்ற சின்னத்திரை நகைச்சுவை நிகழ்ச்சி படைத்தவர் என்பதுடன், வெள்ளித்திரையில் நடிகர் சந்தானத்தின் ஜோடியாக "OK OK" திரைப்படத்திலும் நடித்தவர் என்பது கூடுதல் தகவல்.
நடிகை மதுமிதா ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் உதவி இயக்குனர் மோசஸ் ஜோயலைத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், திருமணமான கொஞ்ச நாளிலேயே கணவரை விட்டுப் பிரிந்து மூன்று மாதங்கள் பிக்பொஸ் வீட்டிற்குள் இருப்பதென்பது மிகவும் கஷ்டமான விடயம் என்பதால் இது பற்றி மதுமிதாவின் கணவரிடமே கேட்டபோது 'அவங்களுக்கு சவால்னா ரொம்ப பிடிச்ச விஷயம். இந்த வாய்ப்பை ஒரு சவாலா எடுத்து பண்ணணும்னு நினைக்கிறாங்க. தவிர, இந்த வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பதில்லையே. பொதுவாகவே வர்ற வாய்ப்புகளைத் தவற விடக்கூடாதுன்னு நினைக்கிறவங்க அவங்க. இதில் சொல்வதற்கு வேறேதும் இல்லை' என்கிறார் மதுமிதாவின் கணவர்.