காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக 'சைக்கோ' படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். அவர் 5ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே சீனியர் ஒருவர் காதல் கடிதம் கொடுத்தாராம். அதை பெருமையாக வீட்டில் கொண்டு வந்து காட்டினாராம் அதிதி. பெற்றோர்கள் அந்த கடிதத்தைப் பார்த்து சிரித்ததாக, அதிதி கூறியுள்ளார்.
21 வயதில் அதிதி ராவிற்கு பிரபல ஹிந்தி நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் 4 வருடங்களில் அவர்கள் பிரிந்து விட்டனர். அவர்கள் பிரிந்த பிறகுத்தான் அதிதி சினிமா துறையில் முழுவீச்சுடன் களம் இறங்கியுள்ளார்.