பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று நேற்று காலை உணரப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு வங்கம், அந்தமானிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
இங்கு நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில், மேற்கு வங்க மாநிலம் பன்குரா மாவட்டத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. அதிர்ஷ்டவசமாக இதனால் பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மக்கள் அச்சத்தில் வீடுளை விட்டு வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவைத் தொடர்ந்து, தென் அமெரிக்க நாடான பெருவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 8 ஆக பதிவாகியுள்ளது. இது அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மோயாம்பா நகரில் இருந்து 180 கி.மீ தொலைவில், பூமியின் 109 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இவ் அனர்த்தினால் கட்டிடங்கள் அதிகமாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பெருவைத் தொடர்ந்து, கொலம்பியா, ஈகுவடோர் நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.