ராஜராஜசோழன் மற்றும் சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ சோழனின் மனைவி வானதி, குறுநில மன்னர்களில் ஒருவரான பழுவேட்டரையர், வீரபாண்டியன், ஈழத்து அழகி பூங்குழலி, தந்திரம் மிக்க ஆழ்வார்கடியான், வீரபாண்டியனுக்காக சோழ சாம்ராஜ்யத்தை ஆட்டுவித்த நந்தினி உள்ளிட்ட அறுபது கதாபாத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல் ''பொன்னியின் செல்வன்'' ஆகும்.
கல்கி எழுதிய இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் தற்போது மணிரத்னம் இறங்கியுள்ளார்.
இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவியும் நடிக்கிறார்.
தற்போது அனுஷ்காவும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து நடிகை அனுஷ்கா கருத்து வெளியிடும் போது, ''பாஹுபலி திரைப்படம் எனக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அதைப் போன்ற மிக பிரமாண்டமான முறையில் தற்போது பொன்னியின் செல்வன் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நான் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை. எனினும் இந்த படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைப்பது உறுதியாகினால், நிச்சயமாக நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.