இவர்கள் இருவருக்கும் 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், பெண் குழந்தை இல்லாத நிலையில் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்தனர். எப்படி இருப்பினும் இருவரது மண வாழ்வும் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
விவகாரத்து பெற்ற ஜெப் பெசோஸ், தனது மனைவிக்கு பெருமளவிலான சொத்தில் 25 சதவீதத்தை ஜீவனாம்சமாக கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அவரது 35 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்தை மெக்கின்சிக்கு வழங்குவதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மூலம், உலகிலேயே அதிக தொகையை மனைவிக்கு ஜீவனாம்சமாக கொடுத்தவர் என்கிற பெருமைக்கு ஜெப் பேசோஸ் சொந்தக்காரர் ஆனார்.
இந்தநிலையில், கணவரால் ஜீவனாம்சமாக வழங்கப்படும் சொத்தில் சரிபாதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க, மெக்கின்சி முடிவுசெய்துள்ளார். அதவாது 18.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் வாழ்வதற்கு தேவையானதை விட அதிகமான சொத்துகள் என்னிடம் உள்ளன” என குறிப்பிட்டுள்ள அவர் மெக்கின்சியின் இந்த கொடை உள்ளத்தை அவரது முன்னாள் கணவர் ஜெப் பெசோஸ் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில், “மெக்கின்சி, மனநேய அணுகுமுறையில் மிக சிறப்பாகவும், நல்ல சிந்தனையுடனும் செயல்படுகிறார். அவரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.