மிகவும் கோலாகலமாக இந்தியப் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா, நேற்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்த பதவியேற்பு நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களுடன் சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்ட பின்னர் தொடர்ந்து 24 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் கடந்த முறையைவிட அதிக பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், இம்முறை, அமைச்சரவையில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. இந்தநிலையில், இந்தத் தடவை ஆறு பெண் அமைச்சர்களே பதவியேற்றுள்ளார்.
முதல் முறையாக, ராணுவ பெண் அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், இம்முறையும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் வெளிவிவகார அமைச்சராக இருந்த சுஸ்மா ஸ்சுவராஜ் இந்த அமைச்சரவையில் இருந்து விளக்கப்பட்டுள்ளார்.