அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர் சுக்ஜிந்தர் சிங். இவரது மகள் 9 வயதுடைய அஷ்தீப் கவுர். சுக்ஜிந்தர் சிங் தனது மனைவியை பிரிந்து மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷம்தாய் அர்ஜூன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னர் மூன்று பேரும் ஒன்றாக வசித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி, அஷ்தீப் என்ற அந்த சிறுமி, குளியலறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இந்த நிலையில் பொலிஸாசாரின் விசாரணையில் சிறுமி குளியல் அறைத் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக வளர்ப்புத் தாயாரான ஷம்தாய் தெரிவித்திருந்தார். ஆனால், பிரேத பரிசோதனை செய்யும்போது அதில் அஷ்தீப் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து ஷம்தாய் கைது செய்யப்பட்டார். வழக்குத் தொடரப்பட்டது. 2 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கிற்கு குயின்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஷம்தாய் மீதான குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.