பிரான்சின் மேற்கு கடற்கரை அருகே உள்ள ''ஒலேரான்'' தீவைச் சேர்ந்த ஒருவர், ஒரு வினோதமான வழக்கை தொடர்ந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் வளர்க்கும் சேவல் தினமும் அதிகாலையில் கூவுவது தனக்கு இடையூறாக இருப்பதாக, குறித்த நபர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அந்த பெண்ணுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் சின்னமாக இளஞ்சேவல் கருதப்படுகின்றது.இந்தநிலையில், இந்த வழக்கு பலராலும் கவனிக்கப்படும் வழக்காக மாற்றம் அடைந்துள்ளது. குறித்த வழக்கை தொடர்ந்த நபர், அந்நாட்டின் செயிண்ட்-பியெர்ரெ-ஒலெரான் தீவில் உள்ள தனது சொகுசு பங்களாவில் விடுமுறையை கொண்டாட வந்திருந்துள்ளார். இந்த விடுமுறை நாட்களில்தான் சேவல் கூவியது அவருக்கு தொந்தரவாக இருந்துள்ளது.
இந்தநிலையில், அயலில் உள்ள ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தான் சுமார் 35 ஆண்டுகளாக குறித்த பகுதியில் வசித்து வருவதாகவும், குறித்த நபர் ஆண்டிற்கு இருமுறை அந்த சொகுசு பங்களாவிற்கு வந்து, விடுமுறையை கழித்துவிட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரும் செல்வந்தர்கள் கிராமப்புறங்களில் இதுபோன்ற சொகுசு பங்களாக்கள் வைத்துள்ளதால், இம்மாதிரியான வழக்குகள் பிரான்ஸ் நாட்டில் புதிதல்ல என்ற கருத்தும் கூறப்படுகிறன்றது.
ஆனால், இவ்வாறான வழக்குகள் காரணமாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் சாத்தியம் இருப்பதை வழக்கு தொடருபவர்கள் யோசிப்பதில்லை.
எப்படி இருப்பினும் இந்த வழக்கு எவ்வாறான தீர்ப்பை கொண்டுவரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.