புங்குடுதீவு மாணவி படுகொலை மற்றும் யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஏற்பட்ட தீவிர நிலை என்பவற்றை ஆராய்வதற்காக காவல்துறையின் 3 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மாணவியின் படுகொலை தொடர்பில் குற்றவிசாரணை பிரிவு விசாரணைகளை நடத்திவருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அண்மையில் இடம்பெற்ற தீவிரநிலை தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, முழு சம்பவம் தொடர்பாகவும் காவல்துறை தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
எவ்வாறாயினும், யாழ்ப்பாணத்தில் தற்போது தீவிர நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் எந்தவித ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது என நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தது.