இந்தநிலையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டிகளை, ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் நேரடியாக கண்டுகழித்து வருகின்றார்கள்.
நேற்று நடைபெற்ற 14 வது போட்டியில், இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியை காண பிரபல தொழில் அதிபரும் பண மோசடியில் ஈடுபட்டு, பெரும் சிக்கலில் உள்ளவருமான விஜய் மல்லையா சென்றிருந்தார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியைக் பார்ப்பதற்கு சென்ற விஜய் மல்லையாவை அவதானித்த ரசிகர்கள், அவரை திருடன் என்று கூறி கூச்சலிட்டனர்.
இதனால் அவர் மீது பலரின் பார்வையும் பட்டது.
எவ்வாறு இருப்பினும் விஜய் மல்லையாவிடம் செய்தியாளர் கேள்வி கோட்டபோது, அதற்கு, தான் இங்கு வந்தது இந்தப் போட்டியை பார்க்க மட்டும்தான் என்று கூறி உடனே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.