விரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ''தலைவி'' வெளிவரவுள்ளது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகின்றது.
அதில் பொலிவூட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கின்றார். அதற்காக அவருக்கு 24 கோடி இந்திய ரூபாய்களை சம்பளமாக வழங்க படக்குழு தீர்மானித்துள்ளது. இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதி கூடுதலான சம்பளம் இதுதான் என, கூறப்படுகின்றது.
முதலில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனைத் தான் இயக்குனர் விஜய் அணுகினாராம். ஆனால் அவர் ஜெயலலிதா கதை பற்றி பல கேள்விகள் கேட்டுள்ளார். பதில் அளிக்க முடியாத அளவுக்கு பல கேள்விகள் இருந்ததால் விஜய் வேறு வழி இன்றி அவரை நிராகரித்துவிட்டு, வேறு நடிகையை தேடி சென்றுவிட்டாராம்.
அந்த சமயத்தில் தான் கங்கனா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.