சுமார் ஒரு வார காலமாக தெற்கு மற்றும் வடக்கு சீனாப் பகுதிகளில் பலத்த காற்றுடன் பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்குண்டு தொடர்புகளற்று இருப்பதாகவும், குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் சுமார் 37 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள், நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 61 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் மூன்றரை லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை தவிர, குவாங்டன் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கித் தவித்த 4,300க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
அத்துடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை தொண்டு நிறுவங்கள் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.