பழங்காலத்தைச் சேர்ந்த மக்கள், தீச்சட்டியில் சூடான கற்களையும், கஞ்சாச் செடியின் இலைகளையும் போட்டு, அதிலிருந்து வரும் புகையை சுவாதித்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு சீனாவில் உள்ள 2500 வருடங்கள் பழமையான கல்லறைகளைத் தோண்டி எடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கஞ்சாவில் மூளையை பாதிக்கக் கூடிய பல சேர்மங்கள் அதிகமாக உள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை அந்த பழங்கால மக்களும் அறிந்திருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கஞ்சாச் செடிகள், அவற்றின் எண்ணெய் விதைகள் என்பன நார்ச்சத்துக்காக பழங்காலம் முதல், கிழக்கு ஆசியாவில் பயிரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மேற்கு சீனாவிலுள்ள பாமிர் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஜிர்சங்கால் கல்லறையில் வைத்து, சில ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனை அடுத்து, இது குறித்த மேலதிக ஆய்வுகளை நடத்தி வருவதாக, ஆராச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.