சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருமே தானம் வழங்கி பயன் பெற வேண்டும் என, நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும், சில பொருட்களை நாம் தானமாக கொடுக்கக் கூடாது எனக் கூறப்படுகின்றது.
கிழிந்த துணிகளைத் தானமாக வழங்கினால், அது துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும். ஒருபோதும் உடைந்த பொருட்கள் மற்றும் கிழிந்த துணிகளை தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்குவதும் எமக்கு துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் எனக் கூறப்படுகின்றது.
பழைய உணவுகளைத் தானமாக வழங்கினால், வருமானத்திற்கு அதிகமான செலவை சந்திக்க நேரிடும். எனவே பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது.
கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களையும் தானமாக வழங்கக்கூடாது. இது எமக்கு ஏதேனும் உயிர் ஆபத்துக்களை தந்து விடும் என கூறப்படுகின்றது.