1980 மற்றும் 90களில் முன்னணி நாயகியாக கோலிவுட்டில் வலம் வந்த பிரபல நடிகை நதியா. பாசில் இயக்கிய பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தார். பிரபுவுடன் ராஜகுமாரன் என்ற படத்தில் நடித்து முடித்தவுடன் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்னர் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து கடந்த 2004ஆம் ஆண்டு 'எம்.குமரன் s/o மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி ஆனார்.
சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கில் போலீஸ் அதிகாரியாக நடித்த நதியாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது அவர் ராம்சரண் தேஜா நடிக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நதியாவுக்கு மிகவும் பவர்புல்லான கேரக்டர் என்று கூறப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-