பிரிட்டன் தலைநகர் லண்டனில், உலக பிரசித்தி பெற்ற மேடம் துஸாத் அருங்காட்சியகம் உள்ளது. இங்கு உலக தலைவர்கள்,உலக அளவில் பிரசித்திப்பெற்ற சாதனையாளர்கள் , ஹொலிவூட் நடிகர்கள் என அவர்களின் தத்ரூப மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மேடம் துஸாத் அருங்காட்சியகத்தில், பொலிவூட் நடிகை, முன்னாள் உலக அழகியான பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிஜ மனிதர்களுக்கும், இந்த சிலைக்கும் வித்தியாசம் தெரியாமல் வடிவமமைக்கப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் இருந்து இங்கே வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது பொலிவூட் நடிகையான பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட்டு மேடம் துஸாத் அருங்காட்சியகத்தில் நேற்று முதல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், ''எனக்கு மிகவும் பிடித்தமான நகரம் லண்டன். இங்கு எனது ரசிகர்களுக்காக என்னுடைய சிலை வைக்கப்பட்டுள்ளது. இது எனக்கு பெருமையாகவுவும் ,மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.