இந்தத் தாக்குதலின்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லீம்கள் 51 பேர் பலியாகியமை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தக் கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட தாக்குதல்தாரி, இந்த தாக்குதலை ஃபேஸ்புக்கில் LIVE செய்த நிலையில், இந்த வீடியோவை தாக்குதல் நடைபெற்ற 29ஆவது நிமிடம் ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கியது.
FaceBook நிறுவனம் குறித்த வீடியோவை நீக்கும் வரை வெறும் 200 பேர் மட்டுமே பார்த்திருந்தனர். ஆனால் பிலிப் நெவில் என்பவர் குறித்த கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதல் வீடியோவை 30 பேருக்கு அனுப்பியிருந்துள்ளார்.
இந்தநிலையில், நியூசிலாந்து நாட்டின் சட்டத்தின்படி ஆட்சேபனைக்குரிய வீடியோவை ஒருவர் மற்றொரு நபருக்கு பகிர்ந்துகொண்டால், 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என சட்டம் கூறுகின்றது.
இதன் பிரகாரம், குறித்த தாக்குதல் வீடியோவை Share செய்த நபருக்கு 21 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.