இதுகுறித்து UNICEF வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கிடப்பட்ட தொகையை விட, இரண்டு மடங்கு மக்கள் கடந்தாண்டில் மாத்திரம் இடம் பெயர்ந்துள்ளனர்.
உலகம் முழுவதும் நிலவி வரும் போர்சூழல் காரணமாக இந்த நிலைமை உருவாகியுள்ளது. சொந்த நாட்டிலிருந்து அகதிகளாக மக்கள் வெளியேறிய நாடுகளில் சிரியா முதலிடம் வகிக்கின்றது.
சிரியாவிலிருந்து கடந்த ஆண்டு வெளியேறிய மக்களின் எண்ணிக்கை, 60 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இரண்டாவது நிலையில் வெனிசுலா காணப்படுகின்றது. வெனிசுலாவில் இருந்து 40 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளார்கள்.
மேலும் UNICEF அமைப்பின் தகவல் படி, கடந்த ஆண்டு உகண்டா நாட்டில் மாத்திரம் 5 வயதுக்குட்பட்ட 2800 குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தொலைக்கப்பட்டு பிரிந்துள்ளனர் என, குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த அறிக்கையின்படி, மொத்தமாக இடம்பெயர்ந்தவர்களில் அரைவாசிப்பேர் குழந்தைகள் என்றும், அதுவும் குறித்த குழந்தைகளில் பெரும்பாலானோர் குடும்பங்களை பிரிந்து தனியாக தவிக்கும் சூழலில் உள்ளனர் என குறித்த அறிக்கை சுட்டி நிற்கின்றது.