குறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...
SooriyanFM Gossip - குறைந்த விலையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ஆரோக்கியத்தைத் தொலைத்து விட்டு, தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. அதிகூடிய விலையில் வாங்கும் உணவுகள் எமது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்து விடுகின்றன. அதே நேரம் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பல உணவுகள், எமது ஆரோக்கியத்தைப் பலப்படுத்துவதாக உள்ளன.
தினமும் சந்தைகளில் காய்கறிகள் வாங்கும் போது கொஞ்சம் கொத்தமல்லித் தழையை கொடுப்பார்கள். பணம் கொடுக்காமலேயே கிடைக்கும் கொத்தமல்லித் தழையை, உணவில் நறுமணம் சேர்ப்பதற்கு நாம் பயன்படுத்துவோம். இது வெறுமனே நறுமணத்தை மட்டும் தருவதில்லை, என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கொத்தமல்லிக் கீரை உஷ்ணம், குளிர்ச்சி போன்ற இரண்டு தன்மைகளையும் கொண்டது. வெயில்க் காலங்களில் உடலுக்குக் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் உடலுக்கு வெப்பத்தையும் தரக்கூடிய அற்புத குணம் கொத்தமல்லிக்கு உண்டு.
காய்ச்சல் நேரங்களில் கொத்தமல்லி சாதம் அல்லது கொத்தமல்லி ரசத்தை குடித்தால், காய்ச்சல் உடனடியாக குணமடையும். கொத்தமல்லிக்குப் பசியை தூண்டும் சக்தி அதிகம் உண்டு. பசியெடுக்காத பிரச்சினை இருந்தால், உடனடியாக உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன், கொத்தமல்லி சூப்பைக் குடித்தால், நல்ல பசி ஏற்படும்.
கொத்தமல்லியை ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் என்பன குணமாகும். அத்துடன் எமது உடலின் பலம் வலுவடையும்.
கொத்தமல்லியை எண்ணெய் விட்டு சிறிது வதக்கி கட்டிகள் மற்றும் வீக்கங்கள் மீது வைத்துக் கட்டினால், விரைவில் அவை குணமாகும்.
கொத்தமல்லிக் கீரையை துவையல் செய்தும் சாப்பிடலாம். இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர் பிரச்சினைகள் வெகுவாக குணமடையும்.
தொடந்து கொத்தமல்லியை சாப்பிட்டு வந்தால், முதுமையினால் உண்டாகும் தோல் சுருக்கங்கள் அகன்று, சருமம் பொலிவடையும்.
கடைகளில் மிகக் குறைவான விலையில் கிடைக்கும் இத்தகைய மகத்தான குணங்கள் நிரம்பிய கொத்தமல்லியை, எமது உணவில் அதிகமாக சேர்த்து பயன் பெறுவோம்.