தன் எஜமானியைக் காப்பாற்றி, அனைவரையும் நெகிழ வைத்த நாய்
SooriyanFM Gossip - தன் எஜமானியைக் காப்பாற்றி, அனைவரையும் நெகிழ வைத்த நாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
நியூசிலாந்திலுள்ள வெல்லிங்டன் பகுதியில் கெரி ஜோர்டான் என்ற 63 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார். இவர் பேட் என பெயரிட்டு, செல்லமாக ஒரு நாயை வளர்த்து வந்தார். நாய் என்பதை விட, அவர் பேட்டை, தனது மகன் போல் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பேட்டுடன், பால்மர்ஸ்டன் என்ற பகுதியை நோக்கி, தனது காரில் கெரி ஜோர்டான் சென்று கொண்டிருந்தார். அந்த கார் பஹியாதுவா என்ற பகுதியில் வைத்து, திடீரென 45 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கால், நெஞ்சு மற்றும் மார்பெலும்பு ஆகிய பகுதிகளில், கெரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுமார் 3 இரவுகளை அந்த பள்ளத்திலேயே கெரி ஜோர்டான் கழித்துள்ளார். எனினும் கெரி ஜோர்டானை, அவரை வளர்ப்பு நாயான பேட் காவல் காத்துள்ளது.
இந்த நிலையில் அப்பகுதிக்கு இரு நபர்கள் வந்த நிலையில், அவர்களை நோக்கி பேட் சத்தமாகக் குரைத்துள்ளது. இதனால் அங்கு வந்த அவர்கள் சம்பவம் பற்றி அறிந்து, அருகில் இருந்த காவல்நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அப்பகுதிக்கு ஹெலிகொப்டர் ஒன்று உடனடியாக வரவழைக்கப்பட்டது. பின்னர் கெரி ஜோர்டான் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தனது எஜமானைக் காப்பாற்றிய பேட், அப்பகுதியில் இருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.