பாகிஸ்தானிலுள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, மொத்தமாக 1,016 நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று, பாகிஸ்தானின் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தெரிவித்துள்ளார்.
அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு நீதிமன்றமாவது அமைக்கப்படும். பிற நீதிமன்றங்களை விட இது மாறுபட்டதாகும். பெண்கள் மீது சுமத்தப்படும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.