Strawberry நிறத்திலான அழகிய நிலவொன்று, வானில் தென்படும் என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இரண்டு முறை ரத்த நிலவு எனப்படும், சிவப்பு நிலா தோன்றியது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் திகதி மற்றும் ஜூலை 27ம் திகதிகளில், இந்த நிலா வானில் தென்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு வானத்தில் Strawberry நிறத்திலான அழகிய நிலா, தென்படும் என நாசா அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இரண்டு நாட்களுக்கு வானத்தில் Strawberry நிலவு தோன்றும். சில இடங்களில் இந்த நிலவு, சிவப்பாய் ஒளிரும். மேலும் சில இடங்களில் மெல்லிய சிவப்பாக தென்படும். இதை இன்று இரவில் இருந்து காணலாம்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.