நீண்டநேரமாகப் பணியாற்றும் அலுவலகப் பணியாளர்களுக்குப் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள், அதிகமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, தினமும் 10 மணித்தியாலங்களுக்கு அதிகமாகப் பணியாற்றினால், பக்கவாதம் இலகுவாக வரக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நீண்டநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தின் கீழ் உள்ளவர்கள், தத்தமது வேலை நேரத்திற்கு இடையே உடற்பயிற்சி செய்வது, நல்ல உணவுகளை உண்பது, போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், பக்கவாதத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, பிரிட்டனின் பக்கவாத தடுப்பு அமைப்பு கூறுகிறது.
மேற்குறிப்பிட்டோரில் 10 ஆண்டுகளாக, 10 மணித்தியாலத்திற்கு அதிக நேரம் வேலை செய்தவர்களில், 1,224 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.