இளைஞர்கள், யுவதிகளைக் கவர்ந்த இளம் நடிகையான சாய் பல்லவி தீவிரவாதி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் சாய் பல்லவி நடித்து வருகின்றார். அதில் ஒரு படத்திலேயே, அவர் தீவிரவாதியாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தப் படத்திற்கு ''விரட்ட பர்வம்'’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரசியலை மையக் கருவாக கொண்ட இப்படம், சாய் பல்லவிக்கு வெற்றியைத் தருமா? என்பது, திரைக்கு வந்த பின்னரே தெரியவரும்.