அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மேற்கொண்ட ஆய்வில், இந்த முடிவு வெளியாகியுள்ளது. பலரும் அறிந்திராத சூப்பர் பக்ஸ் எனப்படும் பாக்டீரியா, மாமிசம் உண்ணுபவர்களை தாக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
அதன்படி, அமெரிக்காவில் வருடத்திற்கு 20 லட்சம் பேர், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியாவால் தாக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 20% சதவீதம் பேருக்கு, காய்கறிகள் மற்றும் பழவகைகளில் இருந்து பரவியதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக ஈ கோலி எனும் ஆபத்தான பாக்டீரியா தாக்கிய கீரையை எலிக்கு கொடுத்து பரிசோதித்தனர். அப்போது வெகுநாட்கள் பயன்பாட்டிற்கு பின், குறித்த எலியின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதித்து, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை அவதானிக்கப்பட்டது.
இந்த ஆய்வை மேற்கொண்ட நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மேலும் தெரிவிக்கையில், தரமற்ற, கலப்படமான காய்கறிகளை அல்லது பழங்களை உண்ணும் மனிதர்களுக்கும் சூப்பர் பக்ஸ் பாக்டீரியா பரவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.