கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கும் அபாயம் உள்ளதாக, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், கடல் நீரிலிருத்து குடிநீர்த் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்தப்படும். இதன் காரணமாக் கடல் வாழ் உயிரினங்கள், உயிர்வாழ்வதற்கான சாத்தியம் இல்லாது போவதாக, கூறப்படுகின்றது.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை விட இயற்கைக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத, குறைந்த செலவை ஏற்படுத்தும் கழிவு நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்துவதே, மிகச் சிறந்தது என்று, நீரியல் நிபுணர் ஜனகராஜன் கூறுகிறார்.
இந்த ஆரோக்கியமானத் திட்டத்தை, இஸ்ரேல், சிங்கபூர் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுத்து வருவதாக, அவர் கூறியுள்ளார்.