கம்போடியாவிலுள்ள ஏழு மாடிக் கட்டிடமொன்றின் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு இளம் தொழிலாளர்கள், 2 நாட்களுக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரபல சூதாட்ட நகரமான சிஹானோக்வில்லியில், சீனாவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று, 7 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத்தை நிர்மாணித்து வந்தது.
இந்த கட்டிடத்தின் 80 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென கட்டிடம் இடிந்து வீழ்ந்து, தரைமட்டமானது. இதன்போது இரண்டு தொழிலாளர்கள், இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வரை, சுமார் 25 தொழிலாளர்களின் உடலங்கள் மீட்கப்பட்டதுடன், இரண்டு இளம் தொழிலாளர்கள் பாதுகாப்பாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.