முருங்கையின் காய்கள், வேர்கள், பட்டை, மலர்கள், விதைகள், என அனைத்தும் தரமான மருத்துவ குணங்களைக் கொண்டவையாகும்.
முருங்கைப் பொடியில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. குறிப்பாக அதிகளவு விட்டமின்கள் காணப்படுகின்றன.
முருங்கை இலையின் பொடியானது நீரிழிவு, இதய நோய், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து எம்மைப் பாதுகாக்கப் பெரிதும் உதவுகின்றது.
முருங்கை உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை சரளமாகக் குறைத்து, சர்க்கரை நோய்த் தாக்கத்தில் இருந்து எமக்கு விடுதலைத் தர வல்லது.
முருங்கை இலையின் பொடி மற்றும் பூக்கள், கல்லீரலைப் பாதுகாக்கின்றது. எனவே உங்கள் உணவில் அதிகமாக முருங்கையைப் பயன்படுத்திப் பயன் பெறுங்கள்.